பெரியவளவு,புலோலி தெற்கு,புலோலியை வசிப்பிடமாக கொண்ட சின்னத்தம்பி இராசம்மா(ஓய்வுபெற்ற கூட்டுறவுச்சங்க கிளை முகாமையாளர்) அவர்கள் இன்று புதன்கிழமை 10/07/2024 இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் அமரர்கள் சின்னத்தம்பி பாறுபதி தம்பதிகளின் பாசமிகு மகளும், அமரர்கள் கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
அமரர் சின்னத்தம்பி அவர்களின் மனைவியும்,
அமரர் இராசலிங்கம், அமரர் சகுந்தலா மற்றும் நேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரதிதேவி(குஞ்சு), அமரர் சந்திரகுமார்(பாபு) மற்றும் இந்திரகுமார்(பபி) (அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்த்துறை திணைக்களம் கரவெட்டி பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
நாகராஜா(அரிசி ஆலை உரிமையாளர் மீசாலை) மற்றும் கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர், நகர திட்டமிடல் அமைச்சு பருத்தித்துறை பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிதர்ஷன்(அமெரிக்கா), தனுஷியா(அவுஸ்திரேலியா), கிரிஜா, திலோஷன்(அமெரிக்கா), யதுஜா,ஹர்சனா,தர்னிஸ், ஆதுஷன் மற்றும் அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
ஷாரா(அமெரிக்கா) மற்றும் பெண்குழந்தை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இறுதிக்கிரிகை
11-07-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு சைவக்கிரிகைகள் ஆரம்பமாகி காலை 9:30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் ஆனைவிழுந்தான் இந்துமயானதிற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகள்:
இரதிதேவி(குஞ்சு)(மகள்) - +94 (77) 779 3984
இந்திரகுமார்(பபி)(மகன்) - +94 (77) 360 6190